ஜெயலலிதா விடுதலை: திருப்பூர் மேயர் மொட்டையடித்து நேர்த்திக்கடன்!!

Read Time:1 Minute, 38 Second

e877e69a-9f68-4979-babf-d65ae9214648_S_secvpfசொத்து குவிப்பு வழக்கில் இருந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுதலையானதை தொடர்ந்து மாநில மகளிர் அணி துணைச்செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி மேயருமான ஏ.விசாலாட்சி பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார்.

ஜெயலலிதா மீண்டும் முதல்–அமைச்சராக பொறுப்பேற்று தமிழக மக்களுக்கு நலத்திட்ட பணிகள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வேண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்தார்.

மேயர் ஏ.விசாலாட்சி கூறுகையில்:–

ஜெயலலிதா மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்வராக வேண்டுமென பழனி முருகனுக்கு மொட்டையடித்து முடிகாணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தேன். அதன்படி ஜெயலலிதா விடுதலையான உடன் எனது நேர்த்தி கடனை நிறைவேற்றியுள்ளேன். இந்த வெற்றி நீதிக்கு கிடைத்த வெற்றி இதன் மூலம் ஜெயலலிதா எந்த தவறும் செய்யவில்லை என்பது உறுதியாகியுள்ளது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பத்தூரில் ரூ.3 ஆயிரம் கடனுக்காக குழந்தைகளுக்கு சூடு வைத்த கொடூரம்!!
Next post ராமநாதபுரம் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் அட்டூழியம்: 3 பெண்களிடம் 15 பவுன் நகை பறிப்பு!!