வாழப்பாடியில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை!!

Read Time:2 Minute, 49 Second

00cfd551-8967-4276-8b2d-272cf1a55d1b_S_secvpfசேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடை அருகே ஏராளமான பேர் சில்லி சிக்கன் கடை, ஆட்டுக்கறி வருவல் கடை மற்றும் முட்டை பணியாரக்கடை உள்ளிட்ட கடைகள் வைத்து உள்ளனர்.

இதில் ஒரு முதியவரும், அவரது மனைவியும் சேர்ந்து குடிசை வீட்டில் முட்டை– பணியாரக்கடை வைத்து இருந்தனர். இந்த கடைக்கு நேற்று இரவு ஒரு மொபட்டில் ஒரு பெண்ணும், ஆணும் வந்தனர். அவர்கள் முட்டை மற்றும் பணியாரம் சாப்பிட்டனர். இரவு வெகு நேரம் ஆகி விட்டதால் சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு செல்வதாக அவர்கள் கூறினார்கள். இதனால் கடை நடத்தும் முதியவர் தனது மனைவியுடன் வீட்டுக்கு சென்று விட்டார்.

இன்று காலை அவர்கள் கடைக்கு திரும்பி வந்து பார்த்த போது கடையில் ஆணும், பெண்ணும் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தனர். குடிசை வீடு முழுவதும் பூச்சி மருந்து வாசம் வீசியது.

இது குறித்து வாழப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் தற்கொலை செய்து கொண்ட 2 பேரும் கள்ளக்காதல் ஜோடி என்பது தெரிய வந்தது. தற்கொலை செய்த பெண்ணின் பெயர் புஷ்பா (வயது35). வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரத்தை சேர்ந்தவர். அவருடன் தற்கொலை செய்த வாலிபர் கூட்டாத்துபட்டியை சேர்ந்த குமாராக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

புஷ்பாவின் கணவர் ராமச்சந்திரன் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகன் பார்த்தீபன் பள்ளி விடுதியில் தங்கி படித்தார்.

வீட்டில் தனியாக இருந்த புஷ்பாவுக்கும் கூட்டாத்து பட்டியை சேர்ந்த குமாருக்கம் இடையே கள்ளத்தொடர்பு இருந்து உள்ளது. இது உறவினர்களுக்கு தெரிய வந்ததால் அவர்கள் தற்கொலை செய்ய முடிவு எடுத்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன்னியாகுமரி கடலில் மிதந்த அம்மன் சிலை: சூரியோதயம் பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி!!
Next post எமனும் நானே… டிராபிக் போலீசும் நானே: விசித்திரமான போக்குவரத்து காவலர்!!