மைசூருவில் 3 மாத குழந்தையின் காலில் திரிசூல ரேகை!!
மைசூரு ரமாபாய் நகராவில் வசித்து வருபவர் ரமேஷ். இவருடைய மனைவி தேவி. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர்கள் மைசூருவில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 3 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தையின் கால் பாதத்தில் திரிசூலம் போன்று ரேகை உள்ளது.
மேலும் நெற்றியில் குங்குமத்தால் வெற்றி திலகமிட்டது போல் உள்ளது. அந்த குழந்தையை குளிப்பாட்டும்போது, அது சிறிது மறைவது போல் இருக்கிறது. ஆனால், சிறிது நேரத்தில் அது மீண்டும் தெளிவாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பகுதியில் தகவல் பரவியது. இதனால் ஏராளமான பொதுமக்கள் அங்கு வந்து, அந்த குழந்தையை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
தேவியே வீட்டில் வந்து பிறந்து இருப்பதாக கூறி அதை வழிபட்டு சென்றனர். அந்த குழந்தைக்கு தேவி என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. அந்த குழந்தையை நேற்று ஏராளமானவர்கள் பார்த்து வியப்படைந்ததுடன் வழிபட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating