லிப்ட் கொடுத்த டிரைவரின் சில்மிஷத்தால் ஓடும் வாகனத்தில் இருந்து குதித்த மூன்று பெண்கள்!!
லிப்ட் கொடுத்த டிரைவர் மூன்று பெண்களுக்கு சில்மிஷம் தொந்தரவு கொடுத்ததால் அந்த பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஓடும் வாகனத்தில் இருந்து குதித்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள பஹ்ரா கிராமத்தைச் சேர்ந்த பிரவீண், சோனியா மற்றும் மோனி ஆகிய மூன்று பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வாகனத்திடம் லிப்ட் கேட்டனர். அந்த வாகனத்தின் டிரைவர் அவர்களை ஏற்றிக்கொண்டார்.
வாகனம் சில மைல் தூரம் சென்றபின் டிரைவர் அந்த பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அவரது சில்மிஷம் எல்லை மீறவே, அந்த பெண்கள் வாகனத்தை நிறுத்துமாறு வற்புறுத்தினர். ஆனால், டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றார்.
இதனால், பதறிப்போன மூன்று பெண்களும் வாகனத்தில் இருந்து திடீரென கீழே குதித்தனர். இதில் அவர்கள் மூன்று பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி டிரைவரை கைது செய்தனர்.
Average Rating