வடபழனி ஆஸ்பத்திரியில் ஊழியர் குத்திக் கொலை: கள்ளக்காதலியின் கணவர் ஆத்திரம்!!

Read Time:3 Minute, 38 Second

d3a710c0-5ff2-466a-baa5-717a37cecaa2_S_secvpfவந்தவாசியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 25). சென்னை எம்.ஜி.ஆர். நகரில் தங்கி வடபழனி 100 அடி சாலையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும், அதே ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் நெற்குன்றம், மூகாம்பிகை நகரை சேர்ந்த சிவக்குமார் மனைவி சண்முக வள்ளிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

இதுபற்றி தெரிந்ததும் சிவக்குமார் அவர்கள் 2 பேரையும் கண்டித்தார். ஆனாலும் கள்ளக்காதல் ஜோடி ஜாலியாக சுற்றி வந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவக்குமார், பிரகாசை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

இன்று காலை ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர் பணியில் இருந்த பிரகாஷிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பிரகாசுக்கு ஆதரவாக சண்முகவள்ளி அங்கு வந்தார்.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி கண் முன்னே கள்ளக்காதலனான பிரகாஷை சரமாரியாக குத்தினார். வயிறு, மார்பில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் மற்றும் நர்சுகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பிரகாஷ் உயிருக்கு போராடுவதை கண்ட சிவக்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆஸ்பத்திரி ஊழியர்கர் பிரகாஷுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் போகும் வழியிலேயே பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் சுப்பராயன் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் பேலீசார் விரைந்து வந்து பிரகாஷின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சிவக்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் போலீசில் கூறும் போது கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவியிடம் பல முறை கூறினேன். நேற்று இரவும் இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. எனவே இன்று காலை ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பிரகாஷை குத்தி கொன்றேன் என்றார்.

கள்ளக்காதல் தகராறில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து ஊழியர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவுண்டம்பாளையத்தில் 15 வயது சிறுமியின் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
Next post திருமணத்தை வாட்ஸ்–அப்பில் பரப்பியதால் விபரீதம்: தாலியை கழற்றி வீசி காதலனை பிரிந்த மாணவி!!