திருமணத்தை வாட்ஸ்–அப்பில் பரப்பியதால் விபரீதம்: தாலியை கழற்றி வீசி காதலனை பிரிந்த மாணவி!!

Read Time:4 Minute, 40 Second

81c52c3a-4f9d-4bb0-8979-2aebb01a1889_S_secvpfதிருவட்டாரை அடுத்துள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 17). கட்டிட தொழிலாளி. இவரது உறவுப்பெண் ராணி (14) 9–ம் வகுப்பு படித்துள்ளார். (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). 2 பேரும் அண்ணன் – தங்கை உறவுமுறை கொண்டவர்கள்.

ராணி நாகர்கோவிலில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். உறவினர் என்பதால் ராணி வீட்டுக்கு ராஜா அடிக்கடி சென்று வந்தார். இதில் 2 பேரும் நெருங்கி பழகினர். அண்ணன் –தங்கை உறவு முறை கொண்டவர்கள் என்பதால் அவர்கள் பழகுவதை ராணியின் பெற்றோர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நாளடைவில் 2 பேரும் காதலிக்க தொடங்கினர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராணியின் தாயாருக்கு அவரது காதல் விவகாரம் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ராணியை கண்டித்தார். அண்ணன் உறவுமுறையுள்ள வரையா காதலிப்பது? என்று கேட்டு அடித்தார்.

இதனால் ராணி, வீட்டை விட்டு வெளியேறி ராஜாவுடன் செல்ல திட்டமிட்டார். ராஜாவுக்கு தகவல் தெரிவித்து அவரை தன் வீட்டுக்கு வரவழைத்தார். பின்னர் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து அவர்கள் 2 பேரும் தப்பிச்சென்றனர்.

ராணியை அழைத்துக்கொண்டு ராஜா தனது நண்பர்கள் வீட்டுக்கு சென்றார். அவர்களது கதையை கேட்டு நண்பர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 2 பேரும் சிறியவர்கள், நீங்கள் தவறான முடிவு எடுத்து இங்கு வந்துள்ளீர்கள். எனவே ராணியை அவரது வீட்டில் கொண்டு போய் விடும்படி நண்பர்களின் குடும்பத்தினர் கூறினர்.

ஆனால் ராணியோ தனது வீட்டிற்கு போகமாட்டேன் என்று பிடிவாதமாக சொன்னதால் வேறு வழி தெரியாமல் தனது வீட்டிற்கே ராஜா அழைத்து சென்றார். உறவினர் மகளுடன் மகன் வீட்டுக்கு வந்ததால் அவரிடம் விசாரித்து நடந்ததை தெரிந்து கொண்ட ராஜாவின் பெற்றோர் நிலைமை விபரீதமாகி உள்ளதை உணர்ந்தனர்.

ராணியின் பெற்றோரிடம் நடந்ததை கூறி பிரச்சனையை சுமூகமாக முடிக்க திட்டமிட்டனர். அதற்குள் ராஜா மாணவியை அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்று சில நண்பர்கள் முன்னிலையில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்டார்.

மேலும் திருமண காட்சிகளை செல்போனில் பதிவு செய்து அதனை ‘வாட்ஸ்–அப்’ மூலம் மற்ற நண்பர்களுக்கு அனுப்பினார். இந்த திருமண காட்சிகள் வேகமாக பரவி ராணியின் குடும்பத்தினரையும் சென்றடைந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் ராஜாவின் வீட்டுக்கு வந்தனர். ஆத்திரத்தில் அவரை அடித்து உதைத்தனர்.

பின்னர் ராணியை தனியாக அழைத்து பக்குவமாக பேசினர். அண்ணன் உறவுமுறை கொண்டவரை திருமணம் செய்தது தவறு, இப்போது உனக்கு படிப்பு தான் முக்கியம். திருமணம் செய்து கொள்ள இன்னும் நாட்கள் இருக்கிறது. அவனுடன் தான் போவேன் என்றால் உனது வாழ்க்கை நாசமாகி விடும் என்று அறிவுரை கூறினர். ராணியின் தாயாரும் கண்ணீர் விட்டு அழுதார்.

அதை ஏற்று ராணி தாலியை கழற்றி ராஜாவிடம் கொடுத்து விட்டு பெற்றோருடன் புறப்பட்டுச் சென்றார். இனி அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக்கூடாது, பேசக்கூடாது எனவும் உறவினர்கள் கட்டுப்பாடு விதித்தனர்.

இந்த சம்பவம் திருவட்டார் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடபழனி ஆஸ்பத்திரியில் ஊழியர் குத்திக் கொலை: கள்ளக்காதலியின் கணவர் ஆத்திரம்!!
Next post திருமண சீர்வரிசையாக ஆயத்த கழிப்பறையுடன் புகுந்தவீடு சென்ற அபூர்வ புதுப்பெண்!!