பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை: தமிழக வாலிபர்கள் 2 பேர் கைது!!

Read Time:2 Minute, 18 Second

d1e6b075-8e19-4e18-a340-6567a2db2402_S_secvpfபெங்களூரு குட்டஹள்ளி பகுதியில் மர்ம நபர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் விரைந்து சென்று அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், அவர்கள் தமிழ்நாடு சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த வாசன்(வயது 34), வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ராஜூ காந்தி(27) என்பதும், இருவரும் சேர்ந்து அந்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இருவரும் தமிழ்நாடு ராணிப்பேட்டையை சேர்ந்த வேணுகோபால் என்பவரிடம் குறைந்த விலைக்கு போதைப்பொருள் வாங்கிக் கொண்டு பெங்களூருவுக்கு வந்ததும், பெங்களூரு காவல்பைரசந்திரா பகுதியை சேர்ந்த வினோத்குமார், சேஷாத்திரிபுரம் ரவி, சீனிவாஸ், கண்டோன்மென்ட் கிருஷ்ணமூர்த்தி, கேசவா, காயத்ரிநகர் ஜெயபிரகாஷ் ஆகியோரின் உதவியுடன் அந்த போதைப்பொருளை பெங்களூருவில் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

கைதானவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ போதைப்பொருள் (அம்பிடமைன்), 2 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வயாலிகாவல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல்விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டிரையம்ப் அறிமுகம் செய்துள்ள புதிய வகை பிரா..!!
Next post துருத்திக் கொண்டும் உறுத்திக் கொண்டும் இருக்கும், ‘இலங்கை தமிழரசுக்கட்சி’யின் அம்மணம்! – அ.ஈழம் சேகுவேரா (கட்டுரை)!!