சாத்தான்குளத்தில் கல்லூரி மாணவர் குத்திக்கொலை: 3 பேர் கும்பல் வெறிச்செயல்!!

Read Time:3 Minute, 54 Second

5d4f5513-c354-4077-937a-7607fdcd5a63_S_secvpfதூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் கோவில்ராஜ். இவரது மகன் பிரவீன் (வயது 20). இவர் தூத்துக்குடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று ஆனந்தபுரம் மிகாவேல் ஆலய திருவிழா நடைபெற்றது. இதில் பிரவீன் பங்கேற்றார். அப்போது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த ஜார்ஜ் (42) என்பவருக்கும், பிரவீனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ஜார்ஜ், அவரது ஆதரவாளர்களான செல்லையா மகன் ராஜரத்தினம், ரத்தினம் மகன் அல்பர்ட் ஆகியோருடன் சேர்ந்து பிரவீனை சரமாரி கத்தியால் குத்தினர். இதில் அவரது உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்து விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை பொதுமக்கள் மீட்டு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் இறந்தார். ஆலய விழாவில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்த தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரவீன் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.

கடந்த ஆண்டு ஆனந்தபுரம் சேகர டயோசீசன் தேர்தல் நடைபெற்றது. இதில் கோவில்ராஜூம், அற்புதராஜூம் போட்டியிட்டுள்ளனர். இத்தேர்தலில் அற்புதராஜ் வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக பிரவீன் செயல்பட்டு வந்துள்ளார். கோவில்ராஜுக்கு ஆதரவாக ஜார்ஜ் செயல்பட்டு வந்துள்ளார்.

இதனால்அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆனந்தபுரம் மிகாவேல் ஆலய விழாவின் போது பிரவீனுக்கும், ஜார்ஜ்க்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இருப்பினும் பிரவீன் மீதான கோபம் ஜார்ஜ்க்கு குறையவில்லை. தொடர்ந்து அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.

நேற்று ஆனந்தபுரம் ஆலய திருவிழாவில் பங்கேற்ற பிரவீனிடம், உன்னால்தான் கோவில்ராஜ் தேர்தலில் தோற்றார் என்று கூறி அவருடன் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ஜார்ஜ், அவரது ஆதரவாளர்கள் ராஜரத்தினம், அல்பர்ட் ஆகியோருடன் சேர்ந்து பிரவீனை கத்தியால் குத்திக்கொன்று விட்டு தப்பியோடியது தெரியவந்தது. தலைமறைவான 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவத்தால் ஆனந்தபுரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவை அருகே என்ஜினீயரிங் மாணவி தாயுடன் தற்கொலை!!
Next post மகன் மீது பாலியல் புகார்: தாய்–2 சகோதரிகள் தற்கொலை முயற்சி!!