பிளஸ்–2 தேர்வில் 1000 மதிப்பெண் எடுக்க முடியாத விரக்தியில் மாணவன் தற்கொலை!!
Read Time:1 Minute, 26 Second
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை மஞ்சபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு. கூலித்தொழிலாளி. இவரது மகன் சுதாகர்(18).
இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்தார். பொது தேர்வில் தான் 1000–க்கும் அதிகமான மதிப்பெண் பெறுவேன் என்று நம்பிக்கையில் சுதாகர் இருந்தார்.
தேர்வு முடிவுகள் கடந்த 7–ந்தேதி வெளியானது. அதில் 857 மதிப்பெண்கள் பெற்று சுதாகர் தேர்ச்சி பெற்றார். ஆனால் தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் சுதாகர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்றிரவு குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்த போது சுதாகர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த ஏலகிரிமலை போலீசார் பிணத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating