காலநிலை மாற்றம் தொடருமென அறிவிப்பு
Read Time:1 Minute, 14 Second
பருவப் பெயர்ச்சி காலநிலை மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் 70 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக களுகங்கை, ஜின்கங்கை, வளவ கங்கை, மாணிக்ககங்கை, களனி, நில்வள கங்கை, மகாவலி கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. அத்துடன் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென்றும் மாலையில் அது கடும் காற்றுடன் கூடிய மழையாகவும் இருக்கும் எனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை, காலி ஆகிய இடங்களில் திடீர் நில அதிர்வுகள் ஏற்படலாம் என்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.