மும்பையில் விமான பணிப்பெண் மானபங்கம்: ஊழியர் கைது!!
Read Time:57 Second
மும்பை அந்தேரியில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருபவர் உபைத்கான். இவர் தன்னுடன் பணிபுரியும் 24 வயது விமான பணிப்பெண் ஒருவரை அலுவலக லிப்டில் சென்றபோது மானபங்கம் செய்தார்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண், உடனடியாக அந்தேரி போலீஸ் நிலையம் சென்று உபைத்கான் மீது புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குபதிவு செய்து உடனடியாக உபைத் கானை கைது செய்தனர். பின்னர், உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 18-ந் தேதி வரை (அதாவது இன்று) போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Average Rating