வாடிப்பட்டி அருகே பள்ளி மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தம்: பெற்றோர் மீது வழக்கு!!

Read Time:1 Minute, 48 Second

0ccf5d3e-2390-452d-a298-cc82ba577d1a_S_secvpfமதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள சின்னமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது40). இவரது மனைவி பாண்டியம்மாள் (35). இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் இந்த ஆண்டு பிளஸ்–2 முடித்து தற்போது வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஆறுமுகம் தனது மகளை உறவினர் பையன் ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தார். அதன்படி அடுத்த வாரம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்தது.

மைனர் பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடுகள் நடந்து வருவது குறித்த தகவல் சமூக நலத்துறை ஊர்நல அலுவலர் கோவிந்தம்மாளுக்கு கிடைத்தது. அவர் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசாருடன் சின்னமநாயக்கன்பட்டிக்கு சென்று ஆறுமுகத்திடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் மைனர் பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்வது குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் மைனர் பெண்ணை மீட்டு மதுரையில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும் மைனர் பெண்ணுக்கு திருமண ஏற்பாடு செய்த ஆறுமுகம், பாண்டியம்மாள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோழியின் வீட்டுக் குளியலறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிரபல மாடல் மரணம்: பகீர் பின்னணி!!
Next post சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கைவிரல்கள் ஒட்டிப் பிறந்த சிறுமிக்கு நவீன சிகிச்சை!!