(படங்கள்) “புங்குடுதீவு வித்தியா”வின் அதிர்ச்சிமிகு கொலைப்படம்..!!
புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கொலைச் சந்தேகநபர்களென மக்கள் இனங்கண்ட முதலில் மூவரையும், பின்னர் மேலும் ஐவரை பொலிஸார் கைது செய்தனர்.
இதேவேளை வெளிநாடுகளில் உள்ள சிலர், “அப்பெண்ணுக்கு அப்படி நடந்தது, இப்படி நடந்தது” என்றெல்லாம் தமது கற்பனைவளத்தை பயன்படுத்தி, கட்டுக்கதைகளை பரப்பி வித்தியாவை ஒவ்வொரு நிமிடமும் கொலை செய்கிறார்கள். வித்தியாவுக்கு வெட்டி விட்டார்கள்… என்றெல்லாம் வீண் கட்டுக்கதைகளை பரப்பி வருகிறார்கள்.
இதன் எதிரொலியாகவே “அதிரடி இணையம்” புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலைப் படத்தை (ஊடக தர்மத்தின்படி மறைக்க வேண்டியதை மறைத்து) பிரசுரிக்கிறோம். இப்படம் மூன்று தினங்களுக்கு முன்னரே முழுமையாக எமக்கு கிடைத்த போதிலும், நாம் உடனடியாக பிரசுரிக்க விரும்பவில்லை.
இருப்பினும் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் வீண் கட்டுக்கதைகள் பரப்பப்படுவதால் இதனை பிரசுரிக்க வேண்டிய தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்.
(புகைப்பட உதவி – வேலணையில் இருந்து “அதிரடி” இணையத்துக்காக தீவகன்)
-Thanks.. ATHIRADY-
Average Rating