பறவை முனியம்மாவே பி.ஏ வைத்துக்கொள்கிற காலத்தில்…

Read Time:2 Minute, 32 Second

laxsmirai34.jpgவயசு பிள்ளைங்க வாழ்க்கையில வதந்தியை அள்ளிப்போடுறதே வேலையாப் போச்சு பத்திரிகைகாரங்களுக்கு! சென்னை நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீடு பிடித்து தங்கியிருந்தார் லட்சுமிராய். அந்த வீட்டுக்கு அந்தி சாய்கிற நேரத்தில் வருகிற ஹீரோக்களின் லிஸ்ட்டை ஒரு பத்திரிகை வெளியிட, வீட்டு ஓனர் பூட்டு போடாத குறையாக ‘போயிட்டு வாங்க’ என்று கூறிவிட்டார் ராயை. பொருத்தமாக வேறு வீடு கிடைக்காததால் ஹோட்டலுக்கு இடம் மாறிவிட்டார் லட்சுமிராய். படப்பிடிப்பு இருந்தால் மட்டும் சென்னையில் இருக்கும் அவர், இல்லாத நேரங்களில் சொந்த ஊருக்கு சென்று விடுகிறார். இரவுநேர படப்பிடிப்புக்கு எப்போதும் நோ சொல்லிவிடும் அவர், அந்த நேரங்களில் ஒய்யாரமாக கிளம்பி ஆரவாரமாக ஆட ஆரம்பித்துவிடுகிறார் கிளப்புகளில்!பறவை முனியம்மாவே பி.ஏ வைத்துக் கொள்கிற காலத்தில், உதவியாளர் வைத்துக் கொள்ளாத ஒரே நடிகை என்ற பெயரையும் எடுத்திருக்கிறார் ராய். கால்ஷீட் விஷயமாக இருந்தாலும் சரி, கடை திறக்கிற விஷயமாக இருந்தாலும் சரி, லட்சுமிக்கு போன் அடித்தால் என்ன விஷயம் என்று கேட்பது அவரேதான்! தன்னுடைய கால்ஷீட்டை தானே பார்த்துக் கொள்கிறார்.தாம் தூம் வந்தால், தன்னுடைய கேரியர் டாப் கியரில் எகிறும் என்று எதிர்பார்த்திருக்கிற அவருக்கு ஒரே வருத்தம், அப்படத்தின் இயக்குனர் ஜீவா உயிருடன் இல்லையே என்பதுதான். இனிமேல் ரஷ்யாவில் படப்பிடிப்பு வைத்தால் கூட போக மாட்டேன். அங்கு போனால் அவரின் மரணம்தான் நினைவுக்கு வரும் என்கிறார் லட்சுமிராய்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிரான்சில் புலிகளின் 8 வங்கிக் கணக்குகள் `சீல்’ வைப்பு
Next post வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கணவரை வெளியே இழுத்துவந்து சுட்டுக் கொன்றனர்