காளஹஸ்தியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது: ரூ.5 ஆயிரம் பறிமுதல்!!
பெங்களூருவில் நேற்று முன்தினம் மாலை நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு, டெல்லி அணிகள் மோதின.
இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? என்பது குறித்து 10 பேர் கொண்ட கும்பல் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி, அங்கு டெலிவிஷனில் கிரிக்கெட் போட்டியை பார்த்து கொண்டே காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக ஸ்ரீகாளஹஸ்தி டவுன் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. சப்–இன்ஸ்பெக்டர் பிரவீண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சூதாட்ட கும்பலை சுற்றி வளைத்தனர். அதில் 10 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடம் விசாரித்தபோது ஸ்ரீகாளஹஸ்தியை சேர்ந்த பிரதாப்ரெட்டி, ராயடு, வெங்கட்ரமணா, பாலாஜி, வித்யாசாகர் என தெரிய வந்தது. இவர்கள் டெல்லி அணி வெற்றி பெறும் என பந்தயம் கட்டியுள்ளனர்.
அதேபோல் எதிரணியில் ஸ்ரீகாளஹஸ்தியை சேர்ந்த தனபதி, பாஸ்கர், கோபு, சுரேஷ், ஜெகதீஸ் என்பது தெரிய வந்தது. இவர்கள் பெங்களூரு அணி வெற்றி பெறும் என பந்தயம் கட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிய வந்தது.
இதையடுத்து 10 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஸ்ரீகாளஹஸ்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Average Rating