ஐதராபாத்தில் மசாஜ் கிளப்புகளுக்கு தடை

Read Time:1 Minute, 24 Second

ஆந்திர மாநிலம் ஐதரா பாத்தில் ஆயுர்வேத கிளீனிக், பஞ்சகர்மா மையம் என்ற பெயரில் ஆயிரக் கணக்கான மசாஜ் கிளப்புகள் இயங்கி வருகின்றன. இவை அரசிடம் உரிமம் பெறாமல் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மசாஜ் கிளப்புகளில் விபசாரம் நடப்பதாக ஆந்திர அரசுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போலீசார் மசாஜ் கிளப்புகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஏராளமான அழகிகள் பிடி பட்டனர். ஆனாலும் தொடர்ந்து அந்த கிளப்புகளில் விபசாரம் நடந்து வருகிறது. இதனால் அவற்றுக்கு தடை விதிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள் ளது. உரிமம் பெறாத மசாஜ் கிளப்புகளுக்கு போலீசார் `சீல்’ வைத்து வருகிறார்கள். இதுபற்றி அரசு அதிகாரி ஒருவர் கூறும் போது, “ஐதராபாத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மசாஜ் கிளப்புகள் அதிகரித்து விட்டன. அவற்றை தடை செய்வது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது. ஆயுர்வேத மையங்களை முறைப்படுத்த திட்டமிட்டுள் ளோம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்க கவர்னராக இந்தியர் தேர்வு
Next post காலநிலை மாற்றம் தொடருமென அறிவிப்பு