வடமதுரை அருகே கல்லால் தாக்கி இளம்பெண் படுகொலை!!

Read Time:1 Minute, 54 Second

a2ce6f9b-5169-40e8-a4cc-fab6a3f54e3b_S_secvpfதிண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மலைக்கேணி என்ற கிராமம் உள்ளது. இங்கு வனத்துறை பகுதியில் அமைந்துள்ள கருப்பசாமி கோவில் அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டு கிடந்தது. அந்த பெண் கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும். இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

அப்பகுதி வழியே சென்ற கிராம மக்கள் அதனை பார்த்து வடமதுரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்–இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட பெண் மெருன் கலர் சட்டையும், சிமெண்ட் கலர் சேலையும் அணிந்துள்ளார். தலை கல்லால் தாக்கி சிதைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த பெண்ணை யாராவது கடத்தி வந்து கற்பழித்து கொலை செய்தார்களா? அல்லது நகை பறிப்பு சம்பவத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பெண்கள் யாராவது காணாமல் போயுள்ளனரா? என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீவில்லிப்புத்தூர் கருவூலம் கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளி போலீசில் சிக்கினார்!!
Next post பேரணாம்பட்டு அருகே 10–ம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிப்பு: 2 குழந்தைகளின் தந்தை கைது!!