பேரணாம்பட்டு அருகே 10–ம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிப்பு: 2 குழந்தைகளின் தந்தை கைது!!

Read Time:2 Minute, 18 Second

3943c1f8-11ea-44f1-8195-3836ff112379_S_secvpfபேரணாம்பட்டு அடுத்த கொண்டம்பல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். கூலித்தொழிலாளி. இவரது மகள் ஜமுனா (வயது 17). (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன)

ஜமுனா அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்தார். தற்போது தேர்வு எழுதிவிட்டு விடுமுறையில் வீட்டில் உள்ளார்.

நேற்று காலையில் தந்தை சுரேசும், தாயும் வேலைக்கு சென்று விட்டனர். ஜமுனா மட்டும் வீட்டில் இருந்தார். இதனை அதே பகுதியை சேர்ந்த பர்னபாஸ் என்பவரின் மகன் அசோக் குமார் (25) நோட்டமிட்டார்.

தெருவில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்த அவர் ஜமுனாவின் வீட்டுக்குள் புகுந்தார். அவரை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜமுனா சத்தமிட்டார். ஜமுனாவின் வாயை பொத்திய அசோக்குமார் அவரை அங்கிருந்து குண்டு கட்டாக தூக்கி கடத்தி சென்றார்.

அதே பகுதியில் உள்ள மாந்தோப்புக்குள் தூக்கிச் சென்ற அசோக்குமார் அங்கு ஜமுனாவை வலுக்கட்டாயமாக மிரட்டி கற்பழித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.

அவர்களை கண்டதும் அசோக்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து ஜமுனாவின் பெற்றோர் பேரணாம்பட்டு போலீசில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்தனர். கைதான அசோக்குமாருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

மருத்துவ பரிசோதனைக்காக ஜமுனா வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடமதுரை அருகே கல்லால் தாக்கி இளம்பெண் படுகொலை!!
Next post திருச்சியில் தனியாக இருந்த பெண் பலாத்காரம்: செக்ஸ் புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் சரண்!!