திருச்சியில் தனியாக இருந்த பெண் பலாத்காரம்: செக்ஸ் புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் சரண்!!
திருச்சி கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் பரிமளா (வயது 35). இவருக்கும் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2011–ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த முருகேசன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இன்ஸ்பெக்டர் முருகேசன் நெல்லை மாவட்டம் சுரண்டை போலீஸ் நிலையம் மற்றும் கடலூர் மாவட்டம் ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு மாறுதலானார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 25–ந்தேதி பரிமளா வீட்டுக்கு சென்ற இன்ஸ்பெக்டர் முருகேசன் அவரை பலாத்காரம் செய்யததாக கூறப்பட்டது. இதுகுறித்து பரிமளா திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே முருகேசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பும் பரிமளா உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் கடந்த 15–ந்தேதி திருச்சி 2–வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு ஆஜராகி ரகசிய வாக்கு மூலம் அளித்தார்.
இதை தொடர்ந்து கடலூர் மாவட்டம் ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சுமித் சரண் ‘சஸ்பெண்டு’ செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் திருச்சி 2–வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதர கண்ணன் முன்பு நேற்று சரணடைந்தார். அப்போது 15 நாள் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டதுடன் ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டார்.
Average Rating