சுவரில் துளை போட்டு மதுபாரில் கொள்ளையடித்த ஊழியர் கைது!!
Read Time:33 Second
அயனாவரம், வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள மதுக்கடை பாரில் கடந்த 17–ந்தேதி சுவரில் துளை போட்டு ரூ.5 ஆயிரம் கொள்ளை போனது.
இதுகுறித்து அயனாவரம் போலீசார் விசாரித்தபோது மதுபாரில் வேலை பார்த்து வரும் விழுப்புரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் இதில் ஈடுபட்டது தெரிந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Average Rating