ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது: 11 செல்போன்கள் பறிமுதல்!!

Read Time:1 Minute, 47 Second

cf045691-71e9-4fd3-87f5-b97a52e47b63_S_secvpfசென்னை- மும்பை அணிகள் மோதிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டி தொடர்பாக கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்தனர்.

நேற்று இரவு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நிசாந்த் என்பவரது வீட்டில் கிரிக்கெட் சூதாட்டம் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அவர் வீட்டில் சோதனையிட்டபோது அவருடன் அனில் சர்மா, சசில் குமார், அஸ்வானி குமார், ரஸ்பால் சிங் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அவர்கள் டிவியில் ஓடிக்கொண்டிருந்த சென்னை- மும்பை போட்டியை பார்த்து பெட்டிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும், 11 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஜம்மு மற்றும் சுஜான்பூரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஒரு பெரிய சூதாட்டக்குழுவின் ஒரு பிரிவு போல் செயல்பட்டார்கள்.

கைதானவர்களிடம் விசாரணை நடத்தினால் முக்கிய குக்கீஸ் பற்றி தகவல் தெரியும் என போலீஸ் சூப்பிரெண்டு ராகேஷ் கவுசால் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சியில் தனியாக இருந்த பெண் பலாத்காரம்: செக்ஸ் புகாரில் சிக்கிய இன்ஸ்பெக்டர் கோர்ட்டில் சரண்!!
Next post உலகின் மிகப்பெரிய சிறுநீரக புற்றுக் கட்டியை அகற்றி எய்ம்ஸ் டாக்டர்கள் சாதனை!!