சுனந்தா கொலையில் சசிதரூர் டிரைவர் உள்பட 3 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை: டெல்லி நீதிமன்றம் அனுமதி!!

Read Time:1 Minute, 25 Second

96e929d3-97ac-4669-896e-8cf84afc716e_S_secvpfமுன்னாள் மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தரூரின் டிரைவர் உள்பட மூன்று பேர் பொய் சொல்வதால், அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்கவேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில் கடந்த வாரம் சிறப்பு புலனாய்வு குழு அனுமதி கோரி மனு அளித்தது.

சசிதரூரின் வீட்டு உதவியாளர் நரெய்ன் சிங், டிரைவர் பஜ்ரங்கி மற்றும் தரூரின் நண்பர் சஞ்சய் தேவன் ஆகியோர் பொய் சொல்வதாக கூறி இம்மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து மூவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இன்று மூவரும் டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுனில் குமார் சர்மா முன் ஆஜரானார்கள். அப்போது உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள மூவரும் சம்மதித்தனர். இதனையடுத்து உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலகின் மிகப்பெரிய சிறுநீரக புற்றுக் கட்டியை அகற்றி எய்ம்ஸ் டாக்டர்கள் சாதனை!!
Next post மேகி நூடுல்சுக்கு விரைவில் தடை? – படிப்பு மற்றும் நடத்தையில் பாதிப்பை உருவாக்கும் உப்பு இருப்பது கண்டுபிடிப்பு!!