அரசு பள்ளியில் இருந்து மெட்ரிகுலேசன் பள்ளிக்கு மாற்றியதால் மாணவர் தற்கொலை!!

Read Time:1 Minute, 59 Second

c4abbced-05a5-47ad-b178-03c905183cf5_S_secvpfகோவை அருகேயுள்ள ஆனைமலை கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 35). இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு மகேஷ் குமார் (14) என்ற மகன் இருந்தார்.

இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8–ம் வகுப்பு படித்தார். அவரை அங்கிருந்து அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்க்க பெற்றோர் முடிவு செய்தனர். இது மகேஷ்குமாருக்கு பிடிக்கவில்லை. இருந்த போதும் மகேஷ் குமாரை மெட்ரிகுலேசன் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கையில் துரைசாமி இறங்கினார். இதனால் மனமுடைந்த நிலையில் மகேஷ்குமார் காணப்பட்டார்.

நேற்று காலை துரைசாமியும், வனிதா வெளியே சென்று விட்டனர். வீட்டில் தனியாக இருந்த மகேஷ் குமார் விஷத்தை குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். மாலை வீட திரும்பிய துரைசாமி மகன் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். மகனை மீட்டு கோட்டூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகேஷ் குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலத்தில் லட்சக்கணக்கில் மோசடி: கைதான வாலிபர் ஜெயிலில் அடைப்பு!!
Next post கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகன் கொலை: பேத்திகளுடன் வந்து தாய் போலீசில் புகார்!!