முஸ்லிம் என்பதால் வாலிபருக்கு வேலை தர மறுத்த மும்பை நிறுவனம் மீது எப்.ஐ.ஆர் பதிவு!!
முஸ்லிம் என்பதால் வாலிபருக்கு வேலை தர மறுத்த மும்பை நிறுவனம் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
23 வயதான எம்.பி.ஏ. பட்டதாரி ஜேஷான் அலி கான். பன்னாட்டு நகை ஏற்றுமதி நிறுவனம் ஒன்றின் வேலைக்கு ஆள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து இணையம் மூலம் விண்ணப்பித்துள்ளார். விண்ணப்பித்த 15-வது நிமிடத்தில் அவருக்கு ஒரு பதில் வந்துள்ளது. ஆர்வமாக மின் அஞ்சலை திறந்து பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு வந்த ஒரு வரி பதிலில் ”நாங்கள் முஸ்லிம் அல்லாதவர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கிறோம்” என கூறப்பட்டிருந்தது.
இதை அடுத்து ஜேஷான் அலி கான், வினோபா பாவே நகர் போலீஸ் நிலையத்தில் மத உணர்வுகளை புண்படுத்தியதாக புகார் அளித்ததை அடுத்து அந்த நகை ஏற்றுமதி நிறுவனத்தின் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
Average Rating