டெல்லி- பாட்னா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் முன்பதிவு பெட்டியில் கொள்ளையடித்த பெண் சிக்கினார்!!

Read Time:2 Minute, 41 Second

0cafe48c-d77c-476d-a174-dc5ef202d8de_S_secvpfநியூடெல்லியில் இருந்து பீகார் மாநில பாட்னாவிற்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்பதிவு பெட்டியில் பயணம் செய்த பெண் ஒருவர் சக பயணியிடம் திருடியபோது மாட்டிக்கொண்டார்.

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஏ-2 என்ற முன்பதிவு பெட்டியில் கட்டி ராய் என்ற பெண்மணி பயணம் செய்தார். இந்த பயணியுடன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிமா குமாரி என்ற பெண்மணியும் பயணம் செய்தார்.

ரெயில் அலகாபாத் அருகில் வந்தபோது கட்டி ராய் திடீரென விழித்து பார்த்தார். அப்போது அருகில் இரந்த பிரதிமா குமாரியை என்ற பெண்ணை காணவில்லை. உடனே அவர் எழுந்து தனது லக்கேஜை சரிபார்த்தார். அப்போது ஒரு பை மாயமானது தெரிந்தது. உசார் அணி ராய் அலறி அடித்துக்கொண்டு ரெயிலின் கழிவறை இருந்த பகுதிக்கு ஓடி வந்தார். அப்போது ஒரு பெண் கழிவறைக்குள் சென்றதை கவனித்தார். அவர் வெளியில் வரும்வரை காத்திருத்தார். அப்போது வெளியே வந்த குமாரி கையில் ராயின் பை இருந்தது. தனது பையை பரிசோதித்தில் அதில் இருந்த 27 ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்கள் திருடப்பட்டிருந்ததை கண்டுபிடித்தார். உடனே அருகில் இருந்த பயணிகள் உதவிகளுடன் குமாரியை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

ரெயில் பாட்னா சந்திப்பிற்கு வந்தவுடன் ரெயில்வே காவல்துறையிடம் ஓப்படைக்கப்பட்டார்.

அந்த பெண்ணின் வீட்டை சோதனையிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். சம்பவம் நடந்த அலகாபாத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்வதா அல்லது பாட்னா ரெயில் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்வதா என்று ஆலோசனை நடத்தி முடிவு செய்வோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுபோல் வடமாநிலங்களில் இருந்து வரும் ரெயில் கொள்ளை சம்பவம் நடைப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவனைப் பழிவாங்க சாலை விதிகளை மீறி ரூ.6 லட்சம் அபராதம் கட்ட வைத்த சவுதி பெண்ணின் சாமர்த்திய வீடியோ!!
Next post 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை!!