பெண் ஜிம் பயிற்சியாளர் மீது ஆசிட் வீச்சு: வாலிபர் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிப்பு!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில், பெண் ‘ஜிம்’ பயிற்சியாளர் மீது ஆசிட் வீசப்பட்டு உள்ளது, ஆசிட் வீசிய நபர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
போபாலில் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வருபவர் ரேனு சாஹு(வயது 21). இன்று காலை வேலைக்கு புறப்பட்டு சென்றார், அப்போது அவரது மீது சஞ்சய் பாட்டீல் என்ற வாலிபர் ஆசிட்டை வீசி உள்ளார்.
இதில் பெரும் காயம் அடைந்த ரேனுவை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரேனு 50 சதவிதம் எரிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ரேனுவின் மீது ஆசிட் வீசிய வாலிபர் சஞ்சய் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
ரேனுவின் மீது ஆசிட் வீசியதும், கோபம் அடைந்த பொதுமக்கள் அவரை அடித்து உள்ளனர். அப்போது சஞ்சய் கத்தியால் குத்தப்பட்டு உள்ளார். இதில் காயம் அடைந்த அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சிலமாதங்களாக ரேனுவுக்கு, தொடர்ந்து வாலிபர் சஞ்சய் தொந்தரவு கொடுத்து வந்து உள்ளார். இதன்காரணமாக அவர் போலீசில் புகாரும் கொடுத்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த வாலிபர் சஞ்சய் ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது.
Average Rating