பரமக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவி காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம்!!

Read Time:1 Minute, 22 Second

61666d80-7573-4081-bcc4-bcb0f5b922e7_S_secvpfராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் தீபலெட்சுமி (வயது20). இவர் அவனியாபுரம் அருகே உள்ள மண்டேலா நகரில் உள்ள அம்பேத்கார் பண்பாட்டு மையத்தில் தங்கி பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறார்.

இந்த நிலையில் கல்லூரிக்கு சென்ற இவரை பெருங்குடியில் ஒரு கும்பல் ஆட்டோவில் கடத்தி சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

இதற்கிடையில் மாணவி தீபலெட்சுமி திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் காதலன் ஆனந்த் (25) என்பவருடன் தஞ்சம் அடைந்தார். மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த ஆனந்தை அவர் காதலித்து வந்ததாகவும், அவரையே திருமணம் செய்வதாகவும் கூறினார்.

இதை தொடர்ந்து காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. பின்னர் தீபலெட்சுமி ஆனந்து வீட்டிற்கு சென்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட்டாபிராமில் வாக்கிங் சென்ற தி.மு.க. பிரமுகரை வெட்டி சாய்த்த கும்பல்: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை!!
Next post கோவில்பட்டியில் கடன் பணத்தை திருப்பி தராததால் தாய்–மகன் தற்கொலை!!