அஜ்மீர் குண்டுவெடிப்பு-தீவிரவாதியின் படம் வெளியீடு
Read Time:1 Minute, 16 Second
அஜ்மீர் தர்ஹாவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கருதப்படும் தீவிரவாதியின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற காஜா மொய்னுதீன் சிஷ்டியின் தர்ஹாவான அஜ்மீர் தர்ஹாவில் கடந்த 11ம் தேதி குண்டுகள் வெடித்ததில் 3 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியது. அனைத்து மதத்தினராலும் போற்றப்படும் சிஷ்டியின் தர்ஹா மீது நடந்த இந்தத் தாக்குதல் மதசார்பின்மைக்கு வேட்டு வைக்க நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸ் குழு, அப் பகுதியினரிடம் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் குற்றவாளி எனக் கருதப்படுபவனின் படத்தை கம்ப்யூட்டர் உதவியோடு உருவாக்கியுள்ளது. இந்தப் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.