கோவில்பட்டியில் கடன் பணத்தை திருப்பி தராததால் தாய்–மகன் தற்கொலை!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம் மணியாச்சியைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி உஷா. இவர்களுடைய மகள் செல்வி (வயது 36). இவருக்கும், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (39) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
ராஜ்குமார், சத்தியமங்கலத்தில் உள்ள ஓட்டலில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு அஜய் (13) என்ற மகனும், அர்ச்சனா தேவி (7) என்ற மகளும் உள்ளனர். கடந்த ஆண்டு கணவன்–மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் செல்வி தன்னுடைய குழந்தைகளுடன் கோவில்பட்டியில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு வந்தார். கோவில்பட்டி கணேஷ் நகரில் வாடகை வீட்டில் செல்வி தன்னுடைய குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
பின்னர் செல்வி, கோவில்பட்டியில் உள்ள தனியார் அழகு நிலையத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் செல்வி அவரது மகன் அஜய் ஆகிய 2 பேரும் வீட்டில் ஒரு கட்டிலில் விஷம் குடித்து பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், கோவில்பட்டி கிழக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்பொது செல்வி தான் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை அவரது வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றினர். அதில் கோவில்பட்டி புதுக்கிராமத்தை சேர்ந்த டேவிட் என்பவருக்கு நான் ரூ.5 லட்சம் கடன் கொடுத்தேன். அவர் திருப்பி தரவில்லை. இதனால் இந்த முடிவுக்கு வந்துள்ளேன் என அந்த கடிதத்தில் எழுதபட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating