அரியலூர் அருகே பெண்ணை கழுத்தை அறுத்து ஓடையில் வீசிய கள்ளக்காதலன் கைது!!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது ராயம்புரம் கிராமம். இதற்கும் பொய்யாதநல்லூர் கிராமத்திற்கும் இடையே வாய்க்கால் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அடியில் இளம் பெண் ஒருவர் கழுத்து அறுப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
நிறைமாத கர்ப்பிணியான அவர் அருகில் 2 வயது ஆண் குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. இதனை கண்டவர்கள் 108 ஆம்புலன்சுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
அதனை தொடர்ந்து அந்த பெண்ணை மீட்ட போலீசார் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் உயிருக்கு போராடிய பெண் திருச்சி மாவட்டம் பெட்ட வாய்த்தலையை சேர்ந்த ரெங்கராஜ் என்பவரது மனைவி சகுந்தலா (வயது 27) என்றும், அருகில் அழுது கொண்டிருந்தது அவரது மகன் அசோக் (2) என்றும் தெரியவந்தது.
கள்ளகாதல் தகராறு காரணமாக லாரியில் சகுந்தலாவை அழைத்து வந்த ரெங்கராஜ் அவரது கழுத்தை அறுத்து ஓடையில் வீசியது தெரிய வந்தது.
இது பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் திருச்சி அருகே ரெங்கராஜை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
ரெங்கராஜ் தனக்கு ஏற்கனவே திருமணமாகி திருவானைக்காவலில் குடும்பம் உள்ளதாகவும் சகுந்தலாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு அவளுடன் 10 ஆண்டுகள் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்தார்.
மேலும் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், கள்ளத்தொடர்பு பற்றி வெளியில் சொல்ல போவதாக மிரட்டியதாலும் சகுந்தலாவை கொலை செய்ய முயன்றதாக தெரிவித்தார்.
Average Rating