மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது!!

Read Time:1 Minute, 33 Second

0e7296b9-a644-4d84-ad45-33d0312dfb0a_S_secvpfசிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த பெரிய நரிக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தவர் முருகன்(வயது 45). இவர் பள்ளியில் படித்த 6 பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் வந்தன. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

சமூகத்தின் மிக முக்கிய பொறுப்பில் உள்ள தலைமை ஆசிரியர் ஒருவர் இது போல் நடந்தது இந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்த நிலையில் தலைமை ஆசிரியர் முருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை மாவட்ட கலெக்டர் முனுசாமிக்கு பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து முருகனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, கலெக்டர் முனுசாமி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து முருகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இல்லத்தரசிகளை மதிக்க வேண்டும்: ஜோதிகா!!
Next post ஷாருக்கானுக்கு ஆபரேஷன்!!