10–ம் வகுப்பு தேர்வில் 2 பாடத்தில் தோல்வி: விஷம் குடித்து மாணவன் தற்கொலை!!

Read Time:1 Minute, 24 Second

37fd2011-fa6b-40d1-bcb1-09f39a941343_S_secvpfஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள குன்னூரை சேர்ந்தவர் சரவணக்குமார். இவரது மகன் மாரீசுவரன் (வயது16). 10–ம் வகுப்பு தேர்வு எழுதி இருந்த இவன், அதில் தேர்ச்சி பெறவில்லை. ஆங்கிலம் மற்றும் கணிதம் பாடத்தில் மாரீசுவரன் தேர்ச்சி மதிப்பெண்ணை எடுக்கவில்லை.

இதனால் அவன் இரு நாட்களாக மன வேதனையில் இருந்தான். வீட்டில் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாரீசுவரன், குருணை மருந்து (விஷம்) சாப்பிட்டு மயங்கினான். அவனை உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மாரீசுவரன் பரிதாபமாக இறந்தான்.

இது குறித்து கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவொற்றியூரில் தவறான சிகிச்சையால் மாணவி முகம் கருகியது: உறவினர்கள் போராட்டம்!!
Next post பாலியல் தொல்லையால் ஆசிரியை தற்கொலை: புதுக்கோட்டை தலைமை ஆசிரியர் சஸ்பெண்டு!!