ஐதராபாத் அருகே மகளை தந்தையே கற்பழித்த கொடூரம்: 5 பேர் கற்பழித்ததாக நாடகமாடியது அம்பலம்!!
ஐதராபாத் அருகே உள்ள ரெங்காரெட்டி மாவட்டம் சிஜ்ரா சித்தப்பள்ளி என்ற ஆதிவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் கமல். இவரது 14 வயது மகள் 5 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
உறவினர் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது பார்வாத் பகுதியில் ஆட்டோவில் வந்த 5 பேர் தன்னை தாக்கி எனது மகளை கடத்தி சென்று கற்பழித்து கொன்று விட்டதாக கமல் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சிறுமியின் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் 14 வயது சிறுமியை பெற்ற தந்தையே கற்பழித்து கொன்று விட்டு நாடகமாடியது தெரிய வந்தது. இது தொடர்பாக கமலை போலீசார் கைது செய்தனர்.
காமவெறி பிடித்த கமல் பருவ வயதில் இருந்த மகளை அடைய வேண்டும் என்று நீண்ட நாட்களாக திட்ட மிட்டார். தனது திட்டத்தை நிறைவேற்ற உறவினர் வீட்டுக்கு செல்லலாம் என்று கூறி இரவு நேரத்தில் மகளை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
வழியில் தண்ணீர் குடிப்போம் என்று இறங்கி ஒதுக்குபுறமான இடத்துக்கு மகளை அழைத்துச் சென்று கொடூரமாக கற்பழித்தார். தனது இச்சை தீர்ந்ததும் எங்கே தன்னை காட்டி கொடுத்தி விடுவாரோ என்ற பயத்தில் கழுத்தை நெரித்து கொன்றார்.
பின்னர் சிறிய கல்லால் தனது தலையில் தாக்கி ரத்தம் வரவழைத்து ஆட்டோவில் வந்த 5 பேர் தன்னை தாக்கி மகளை கற்பழித்து கொன்று விட்டதாக நாடகமாடியுள்ளார்.
ஆனால் பிரேத பரிசோதனையில் சிறுமியை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கற்பழித்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. மேலும் கொலை நடந்த இடத்தில் ஆட்டோ வந்ததற்கான அடையாளம் தெரியவில்லை. இரு சக்கர வாகனம் வந்த தடயமே பதிவாகி இருந்தது. அது கமல் வந்த டி.வி.எஸ். மோட்டார் சைக்கிள் என்பது உறுதியானது.
இதை வைத்து போலீசார் கமலிடம் மிரட்டி விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒப்புக் கொண்டார்.
Average Rating