தாராபுரம் அருகே நிதி நிறுவன அதிபர் மகன் கிணற்றில் மூழ்கி சாவு!!
Read Time:1 Minute, 15 Second
திருப்பூர் மாவட்டம் மூலனூர் மஞ்சகாமன்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் மோகன்குமார் (வயது 18). ராமசாமி கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
திருவிழாவுக்காக ராமசாமி குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தார். மோகன்குமார் பிளஸ்–2 தேர்ச்சி பெற்று சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் என்ஜினீயர் படிப்புக்காக சேர்ந்தார்.
இந்நிலையில் திருவிழாவுக்கு வந்த மோகன்குமார் நண்பர்களுடன் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். கிணற்றில் இறங்கி குளித்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் முழ்கி தத்தளித்தார். சிறிது நேரத்தில் நண்பர்கள் கண்முன் முச்சுதிணறி பலியானார்.
இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating