2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Read Time:1 Minute, 51 Second

திண்டுக்கல் அருகே பெற்ற குழந்தைகளை கொன்ற பெண் தானும் தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம் அருகேயுள்ள வெள்ளையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், துளசிமணி, பிரகாஷ் என்ற இரு மகன்களும் இருக்கிறார்கள். கணேஷ்குமார் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் குடும்பத்தின் அன்றாட பிழைப்புக்கே பெரும் கஷ்டமாக போனதால், மனைவி பழனியம்மாள் கணவரிடம் வேலைக்கு போகச்சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கணவனின் இந்த அலட்சிய போக்கால் வெறுத்துப் போன பழனியம்மாள், தனது இரு மகன்களையும் ஊரில் உள்ள கிணற்றில் தள்ளி விட்டு கொன்றதுடன், தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிந்து அவர்கள் கிணற்றிலிருந்து மூவரின் சடலங்களையும் தீயணைப்புப் படையினரின் துணையுடன் மீட்டு வருகிறார்கள். குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட இந்த சம்பவம் வெள்ளையம்பட்டி கிராமத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பேயை ஓட்ட பெண்களுக்கு சாட்டையடி!!
Next post மசாஜ் கிளப் போர்வையில் நடிகை வீட்டில் அழகிகள் விபசாரம்: டாக்டர் கைது- 2 பெண்கள் மீட்பு