மந்திரியின் ஷூவுக்கு லேஸ் மாட்டி விட்ட போலீஸ்: வலுக்கும் கண்டனம்!!
Read Time:1 Minute, 24 Second
மேற்கு வங்க மாநிலத்தில் மந்திரியின் ஷூவுக்கு போலீஸ்காரர் ஒருவர் லேஸ் மாட்டிவிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சர் ரச்பல் சிங். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர் இன்று தலைமை செயலகத்தில் நடந்த ஒரு அஞ்சலிக் கூட்டத்திற்காக வந்திருந்தார். அஞ்சலிக் கூட்டம் என்பதால் வெளியில் ஷூவைக் கழற்றி வைத்து விட்டு வந்தார்.
அஞ்சலிக்கூட்டம் முடிந்த பின், வெளியே வந்து சிரமப்பட்டு தனது ஷூவை எடுத்து அணிய முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது ஓடி வந்த ஒரு போலீஸ்காரர், மந்திரி குனிந்து கஷ்டப்படக்கூடாது என்றெண்ணி அவருக்கு ஷூ லேசை மாட்டி உதவியுள்ளார். இந்த சம்பவம் ஊடகங்கள் மூலமாக வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, எதிர்க்கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Average Rating