திருமணமான இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த உறவினர்!!
Read Time:1 Minute, 10 Second
மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் வசித்து வரும் இளம்பெண்(28) ஒருவர் கஜூபடா-வடச்சபடா கிராமத்தில் நடந்த ஒரு திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக தனது கணவர் மற்றும் மாமாவுடன்(38) சென்றிருந்தார்.
திருமண விழா முடிந்ததும் இவருடன் இருந்த மாமா அவரது கணவர் கணேஷ்புரியில் உள்ள வீட்டுக்கு ஏற்கனவே சென்று விட்டதாக கூறினார். இதனால் வீட்டிற்கு தனியாகச் சென்ற அந்தப் பெண்ணை வழிமறித்த அவரது மாமா, அவரை காட்டுக்குள் தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண் இதுகுறித்து நேற்று போலீசில் புகாரளிக்கவே, தற்போது இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அந்த பெண்ணின் மாமாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating