சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு பஸ்சில் பிரசவம்: பெண் குழந்தை பிறந்தது!!

Read Time:1 Minute, 39 Second

364f62e0-808b-40c2-bc38-20cbdcfa2b2e_S_secvpfவிருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் யூசுப், இவரது மனைவி மங்காத்தாள் (வயது 34). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

மங்காத்தாள் மீண்டும் கருவுற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே மங்கலம் பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கும், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்.

சிகிச்சைக்காக அலைக்கழிக்கப்பட்ட மங்காத்தாள், கணவன் மற்றும் சில பெண்களுடன் கடலூருக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார். பண்ருட்டி பகுதியில் பஸ் சென்றபோது மங்காத்தாளுக்கு பிரசவ வலி அதிகரித்தது.

சிறிது நேரத்தில், பஸ்சில் பயணம் செய்த பிற பெண் பயணிகள் உதவியுடன் மங்காத்தாள் அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தார். இதனால் உடன் சென்ற குடும்பத்தினரும், பிற பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர். தாயும், குழந்தையும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பராமரிப்பு பெற்று வீடு திரும்பினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைரங்கள் பதிக்கப்பட்ட 20 லட்சம் டாலர் மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த கிட்டார் கின்னஸ் சாதனை படைத்தது!!
Next post கருப்பு பணம்: இரு இந்திய பெண்களின் பெயர்களை வெளியிட்டது சுவிஸ் வங்கி!!