ரூ. 21 லட்சம் கள்ள நோட்டுகளுடன் எல்லை பாதுகாப்பு வீரர் கைது!!
Read Time:1 Minute, 3 Second
கேரளாவின் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா பகுதியில் ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட எல்லை பாதுகாப்பு வீரர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட இந்த நோட்டுகளை 2 ஆண்டு மருத்துவ விடுப்பில் உள்ள எல்லை பாதுகாப்பு வீரரான கிருஷ்ணகுமார்(42) என்பவர் மலப்புரம் மாவட்டத்துக்கு கொண்டுவந்து புழக்கத்தில் விட்டதாகவும், அவரையும் அவரது கூட்டாளியான டேவிட் சாம் ஜான் என்பவரையும் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்த போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் 21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
Average Rating