தாம்பரம் அருகே கிராம நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல்: பா.ஜனதாவை சேர்ந்த 3 பேர் மீது புகார்!!
Read Time:1 Minute, 0 Second
தாம்பரம் அருகே உள்ளது கவுரிவாக்கம். இந்த கிராமத்தில் கோமதி என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். அந்த பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி கோமதி அங்கு சென்றார். மணல் திருடிக் கொண்டு இருந்த மனோகர் மற்றும் 2 பேரை அவர் தடுத்தார்.
அதற்கு அவர்கள் தாங்கள் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் எங்களை தடுப்பதா? என்று கூறி தகாத வார்த்தைகளை சொல்லி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து கோமதி போலீசில் புகார் கொடுத்து உள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating