வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளையனை மின்கம்பத்தில் கட்டி தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்!!

Read Time:1 Minute, 19 Second

760c6078-8d5f-4387-92e6-e7ecca54fa30_S_secvpfகூடுவாஞ்சேரி, அபய் அவென்யூ பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வடமாநில வாலிபர் சுற்றித் திரிந்தார்.

திடீரென அவன் ஒரு வீட்டுக்குள் புகுந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் ஒருவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் மர்ம வாலிபரை விரட்டி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர் அவனை அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த கொள்ளையனை மீட்டு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

அவன் யார்? இது போல வேறு எங்கேனும் கொள்ளையில் ஈடுபட்டானா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடு புகுந்து திருட முயன்ற கொள்ளையன் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காட்பாடியில் தகாத உறவில் பிறந்ததால் குழந்தையை முட்புதரில் வீசிய தாய் கைது!!
Next post மாதவரத்தில் தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை!!