மும்பை கடற்படை அதிகாரி மீது பெண் கற்பழிப்பு புகார்!!
Read Time:1 Minute, 1 Second
மும்பை கடற்படையில் லெட்டினென்ட் கமாண்டராக வேலைப்பார்க்கும் அதிகாரி மீது பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் அளித்துள்ளார்.
அந்த பெண் கடற்படை ஆணையம் மற்றும் மும்பை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து கடற்படையும், மும்பை போலீசாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவர்களுக்கிடையே உள்ள உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக இந்த வழக்கு தொடரப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து கடற்படை தலைமை அட்மிரல் ஆர்.கே. தோவான் கூறுகையில், ‘‘இது குறித்து அறிக்கை பெறப்பட்டதும், தேவைப்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Average Rating