அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணைக் குழுக்கள் நியமனம்
Read Time:1 Minute, 0 Second
அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்கு மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விசாரணைக் குழுவினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள படையினரிடம் விசாரணைகளை மேற்கொள்வர் என்று கூறப்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள விமானப்படைத் தளபதி றொசான் குணதிலக வேறு இரு குழுக்களை நியமித்துள்ளார். இக்குழுக்களில் நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட அதிகாரிகள் அங்கம் வகிக்கின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இவற்றைவிட பொலிஸ் மா அதிபரும் தனியான ஒரு விசாரணைக் குழுவை நியமித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.