பல்லடம் அருகே டி.வி. பார்த்ததை கண்டித்ததால் தந்தையை அடித்துக்கொன்ற மகன்!!

Read Time:3 Minute, 36 Second

804cae1b-1e1f-4719-a823-ec74dbe3e409_S_secvpfதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள பரமசிவம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சின்னச்சாமி(வயது 60). விசைத்தறி அதிபர். இவரது மகன் வேலுச்சாமி(28). மனநிலை பாதிக்கப்பட்டவர்.

நேற்று இரவு 10 மணி அளவில் வேலுச்சாமி வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். அவரிடம் சின்னச்சாமி ‘மணி 10 ஆகிறது. டி.வி.யை அணைத்து விட்டு தூங்கு’ என்று கூறினார்.

ஆனால் வேலுச்சாமி தனது தந்தை கூறுவதை காதில் வாங்கிக்கொள்ளாமல் தொடர்ந்து டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் சின்னச்சாமியால் தூங்கமுடியவில்லை.

எனவே 11 மணி அளவில் மீண்டும் மகனை கண்டித்தார். அப்போது தந்தைக்கும்–மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் வேலுச்சாமி ஆத்திரமடைந்து அங்கு கிடந்த பாவுநூல் கட்டையை எடுத்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்தார். படுகாயமடைந்த சின்னச்சாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அதன் பின்னரும் எந்த சலனமும் இல்லாமல் வேலுச்சாமி டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். வெகுநேரமாக டி.வி. ஓடிக்கொண்டிருக்கிறதே என்று அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து அங்கு வந்தனர்.

கையில் ரத்தக்கறை படிந்த பாவுநூல் கட்டையுடன் வேலுச்சாமி நிற்பதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது சின்னச்சாமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வரும் வழியிலேயே சின்னச்சாமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் வேலுச்சாமியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

டி.வி.பார்க்கும் தகராறில் தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தந்தையை அடித்துக் கொன்றதாக கைதாகியுள்ள வேலுச்சாமி கடந்த 2010–ம் ஆண்டு தனது தாயார் சுப்புலட்சுமியை அரிவாளால் வெட்டிக் கொன்றார். கொலை வழக்கில் கைதான அவர் கடந்த ஆண்டுதான் விடுதலையானார்.

தற்போது அவர் தனது தந்தையை பாவுநூல் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார். பெற்ற மகனே தாய்–தந்தையின் உயிருக்கு எமனாக அமைந்து விட்டானே என்று பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரெயில் விபத்தில் இரு கைகளையும் இழந்த மாணவி 12-ம் வகுப்பு தேர்வில் 63 சதவீதம் மதிப்பெண் பெற்றார்!!
Next post திருச்சி ஜங்சனில் ரெயிலில் ஏறும் போது தண்டவாளத்தில் விழுந்து அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய தம்பதி!!