திருச்சி ஜங்சனில் ரெயிலில் ஏறும் போது தண்டவாளத்தில் விழுந்து அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய தம்பதி!!

Read Time:1 Minute, 40 Second

82406cc6-bcaf-4843-9aa5-664a4985fb03_S_secvpfதிருச்சி ஜங்சன் 1–வது பிளாட்பாரத்தில் சென்னை செல்வதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று கொண்டிருந்தது. காலை 9 மணி என்பதால் ரெயிலில் அதிக கூட்டம் இருந்தது. முன் பதிவில்லாத பெட்டியில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

அப்போது திருச்சியை சேர்ந்த சண்முகம் (வயது 60) மற்றும் அவரது மனைவி கோச்சடையாள் (60) ஆகியோர் அவசர அவசரமாக ரெயிலில் ஏறினர். அப்போது ரெயில் புறப்பட்டு விட்டதால் தடுமாறிய சண்முகம் தண்டவாளத்தில் விழுந்தார். அவரை காப்பாற்ற முயன்ற கோச்சடையாளும் தவறி உள்ளே விழுந்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த திருச்சி ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் அக்பர்கான், சூசை ஆகியோர் ரெயில் பெட்டியில் உள்ள டிஸ்க் மூலம் ரெயிலை உடனே நிறுத்தி 2 பேரையும் காப்பாற்றினர். உரிய நேரத்தில் சமயோசிதமாக செயல்பட்டதால் இத்தம்பதியினர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

பயணிகளின் உயிரை காப்பாற்றிய சப்–இன்ஸ்பெக்டர்கள் அக்பர்கான், சூசை ஆகியோரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆனி விஜயா பாராட்டினார். பயணிகளும் பாராட்டினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல்லடம் அருகே டி.வி. பார்த்ததை கண்டித்ததால் தந்தையை அடித்துக்கொன்ற மகன்!!
Next post சேந்தமங்கலம் அருகே பிளஸ்–2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்!!