சேந்தமங்கலம் அருகே பிளஸ்–2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்!!
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்த 16 வயது மதிக்கதக்க மாணவி அதே பகுதியில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் பளஸ்–1 படித்து வருகிறார். தற்போது அவர் பிளஸ்–1 தேர்ச்சி அடைந்து பிளஸ்–2 செல்ல உள்ளார்.
இந்த நிலையில் பேளூக்குறிச்சி கா.வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது மகன் சதிஷ் (வயது 25) என்ற வாலிபர் கொத்தனார் வேலைக்காக செல்லும் போது அந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.
மாணவி தினமும் பள்ளி வகுப்புகள் முடிந்தவுடன் மாலையில் சைக்கிளில் வீட்டுக்கு வருவார். இதனால் வாலிபர் சதீசும் வேலை முடிந்து மாலையில் வீட்டுக்கு வரும்போது அந்த மாணவியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனால் இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சதீஷ், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை கற்பழித்துள்ளார்.
இதனை மாணவி வீட்டில் யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார். தொடர்ந்து அந்த மாணவியுடன் வாலிபர் சதிஷ் உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.
இந்த நிலையில் மாணவியின் வயிறு நாளுக்கு நாள் பெரியதானதை கண்டதும் பெற்றோருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர், 7 மாத கர்ப்பிணியாக மாணவி உள்ளார் என பெற்றோரிடம் தெரிவித்தார்.
இது பற்றி பெற்றோர் மகளிடம் கேட்டபோது வாலிபர் சதிஷ் தன்னை திருமணம் செய்வதாக கூறி கற்பழித்து விட்டார் என கண்ணீர் மல்க கூறினார்.
இதையடுத்து பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் வாலிபர் சதீசை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating