21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்ற வியாபாரிகள் கைது
Read Time:1 Minute, 21 Second
மாத்தறை நகரில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விநியோகம் செய்த 37 பேரை கலால் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாத்தறை நகரில் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட கலால் திணைக்கள அதிகாரிகள் இவர்களைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு சிகரெட் கொள்வனவு செய்த 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், சிறுவர்கள் என பலரையும் கைது செய்துதுள்ள காலால் திணைக்கள அதிகாரிகள் அவர்களை பொலிஸாரிடம் கொடுத்து எச்சரிக்கையின் பின்னர் விடுவித்துள்ளனர். இது போன்ற முற்றுகை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப் படுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.