கைவிட்ட காதலன் மீது ஆசிட் வீசிய பெண் தலைமறைவு!!

Read Time:1 Minute, 24 Second

5aea2c7a-0220-48db-929c-45075de75f74_S_secvpfஉத்தரப்பிரதேசத்தின் பால்லியா மாவட்டத்தில் உள்ள ஜாம் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் பால்(20) என்பவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

நாளடைவில், இந்த காதல் கசந்துப்போகவே, அந்தப் பெண்ணை ராஜ்குமார் நிராகரித்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில், நேற்றிரவு ராஜ்குமாரை அவரது வீட்டுக்கு தேடிவந்த அந்தப் பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி அவரை வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு ராஜ்குமார் மறுப்பு தெரிவிக்க, ஆத்திரம் அடைந்த அவர், கையில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை ராஜ்குமாரின் மீது ஊற்றிவிட்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். அலறித்துடித்த ராஜ்குமார் வாரணாசி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருக்கும் அந்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ள நோட்டு வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது: மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு!!
Next post இந்தியாவில் புகை பிடிக்கும் பெண்கள் எண்ணிக்கை 20 சதவீதமாக உயர்வு: ஆய்வில் தகவல்!!