ஓமலூர் அருகே காதலை பிரிப்போர் சங்கம் என்று பிளக்ஸ் பேனர் வைத்ததால் பரபரப்பு!!
Read Time:1 Minute, 19 Second
நாட்டில் எது எதுக்கோ சங்கம் வைத்து உள்ளனர். இதில் காதலை பிரிப்போர் சங்கம் என்று ஒரு சங்கத்தை ஆரம்பித்து உள்ளனர் ஓமலூர் பகுதி இளைஞர்கள்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கொங்குப்பட்டி மணியக்காரணூர் பகுதியில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து காதலை பிரிப்போர் சங்கம் என்று பிளக்ஸ்பேனர் வைத்து உள்ளனர். இந்த சங்கத்திற்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என்று பொறுப்புகள் வழங்கி உள்ளனர்.
இதில் 10–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உறுப்பினராகவும் உள்ளதாக அந்த பிளக்ஸ் பேனரில் எழுதப்பட்டு உள்ளது.
பிளக்ஸ் பேனரில் ‘வேணாம் மச்சான் சேட்டை, இது மணியக்காரனூர் கோட்டை’ என்று எழுதப்பட்டு உள்ளது. கடைசியாக ஊர்ல தப்பு நடக்கணும் ஆனா, அத நாங்க மட்டும் தான் பண்ணணும் என்றும் எழுதி வைத்து உள்ளனர். இந்த பகுதியில் செல்வோர் போவோர் இந்த பிளக்ஸ் பேனரை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Average Rating