இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார் கூறிய என்ஜினீயரிங் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை!!
ராமநாதபுரம் மாவட்டம் காட்டுபரமக்குடியை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் ராதா (வயது 21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில், ராதா திடீரென்று மாயமானார். அவரை கண்டுபிடிக்க சேகரின் உறவினரான மதுரை ஜெய்ந்த்புரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த வைரம் என்பவர் உதவி உள்ளார். இதைதொடர்ந்து, ராதாவை சில நாட்கள் இன்ஸ்பெக்டர் வைரம் பாதுகாப்பில் இருக்கும்படி ராதாவின் பெற்றோர் கூறி உள்ளனர்.
இதற்கிடையே இன்ஸ்பெக்டருக்கும், அந்த பெண்ணிற்கும் தொடர்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் ராதா கர்ப்பமானார். இதனால், ராதா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இன்ஸ்பெக்டரிடம் வற்புறுத்தி உள்ளார். அதற்கு இன்ஸ்பெக்டர் மறுத்து விட்டாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதை அறிந்த இன்ஸ்பெக்டர் வைரம் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மாணவி ராதாவுக்கு மருத்துவ பரிசோரனை நடைபெற்றது.
Average Rating